மேல் மற்றும் தென் கரையோரங்களில் அடிக்கடி பலத்த காற்று வீசும்! மொஹமட் சாலிஹின்
இலங்கைக்கு மேற்கே கொழும்பிலிருந்து 300 கி.மீ தொலைவில் அரபிக் கடலில் பலத்த தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த தாழமுக்கம் அடுத்து சில மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தார்.
மேல் மற்றும் தென் கடற்பிராந்தியத்தில் மணிக்கு 90 - 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், இதனால் கடலுக்குச் செல்வோர் அவதானத்துடன் இருக்குமாறும் மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
-Tamilwin
No comments:
Write comments